கிருஷ்ணகிரி, ஜூன் 21: கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியில், அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட கிராம பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துதல் தொடர்பாகவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும், ஊரக வளர்ச்சி துறை மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு முகாம்களில் பத்திரப்பதிவு துறை, வருவாய் துறை, வங்கி சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். அதன்படி இன்று (21ம் தேதி) கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளி கிராமத்தில் முகாம் நடைபெறுகிறது.