தர்மபுரி, ஜூன் 21: அரசு பேருந்து நடத்துனர்களுக்கு, தரமான பயண சீட்டு இயந்திரம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஏஐடியூசி அரசு போக்குவரத்து கழகத் தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு ஏஐடியூசி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க, மண்டல நிர்வாக குழுக் கூட்டம் மாவட்ட பொருளாளர் ரவி தலைமையில் தர்மபுரியில் நடந்தது. சம்மேளன பொது செயலாளர் லட்சுமணன், மண்டல பொது செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், தொழிலாளர்களுக்கான அரியர்ஸ் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். விபத்தில்லாமல் பஸ்களை ஓட்டிய டிரைவர்களுக்கு வெகுமதி வழங்க வேண்டும். பணிமனைகளில் உள்ள ஓய்வறைகள் சரியான முறையில் பராமரிப்பு செய்யாததால், மூட்டை பூச்சிகள் அதிக அளவில் உள்ளது. இதனால் ஓய்வு எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் மிகவும் சிரம படுகின்றனர்.