ராமநாதபுரம்: இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் மண்டபம் மீனவர்கள் படகு சேதமடைந்தது. படகில் இருந்த மீனவரை தாக்கி, மீன்களையும் அள்ளிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு துறைமுகத்தில் இருந்து 315 விசைப்படகுகள் நேற்று முன்தினம் காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. நள்ளிரவு மண்டபம் அஜ்மல் விசைப்படகில் இருந்த படகோட்டி புல்லாணி, மீனவர்கள் மனோகரன், மலைக்கண்ணன், வெள்ளைச்சாமி ஆகியோர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் இலங்கை கடற்படை ரோந்து கப்பலில் வந்த 5 பேர், அஜ்மல் விசைப்படகின் முகப்பில் மோதினர். இதில் படகின் பலகை சேதமானது.
