மதுரை: மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனியை சேர்ந்தவர் ஜெகதீஸ்(39). இவரது மனைவி மணிமாலா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. ஜெகதீஸ் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது பணம் மற்றும் நண்பர்களிடம் கடனாக பணத்தை பெற்று பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார்.