திருப்பரங்குன்றம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறையில் உதவி பேராசிரியராக பணி புரிபவர் சண்முகராஜா (49). தென்காசி அருகே ஆலங்குடியை சேர்ந்த இவர் மீது மாணவிகள் ஏற்கனவே பல்வேறு புகார்களை கூறி வந்த நிலையில், சில மாணவிகள், ஆளுநருக்கும் புகார்களை அனுப்பியுள்ளனர். எனினும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. வரலாற்று துறையில் எம்ஏ இரண்டாமாண்டு படிக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவரை, உதவி பேராசிரியர் சண்முகராஜா, உருவத்தை சொல்லி கேலி செய்வதும், கரும்பலகையில் படம் வரைந்தும் பல்வேறு வகையில் துன்புறுத்தியுள்ளார்.