மும்பை: எம்பி சஞ்சய் ராவத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி)யை சேர்ந்த மாநிலங்களவை எம்பி சஞ்சய் ராவத்துக்கு நேற்று மதியம் வந்த ஒரு குறுஞ்செய்தியில் “பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை கொலை செய்தது போல் உன்னையும் கொன்று விடுவோம்” என்று கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த கொலை மிரட்டலுக்கு டெல்லியை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.