மதிமுக கிளை நிர்வாகிகள் தேர்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட மதிமுகு கிளை கழக நிர்வாகிகள் தேர்தல் காஞ்சிபுரத்தில் நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட அவை தலைவர் கருணாகரன்  தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் பொது குழு உறுப்பினரும், தேர்தல் ஆணையருமான ராமானுஜம், மாவட்ட தேர்தல் கண்காணிப்பு குழுவின் நிர்வாகிகளாக மாவட்ட செயலாளர் வளையபதி, மாவட்ட அவை தலைவர் கருணாகரன், மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஏகாம்பரம், தலைமை செயற்குழு உறுப்பினராக அருள், பொது குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் நகர செயலாளர் மகேஷ், வாலாஜாபாத் பேரூர் செயலாளர் சிவகுமார், உத்திரமேரூர் ஒன்றிய மூத்த நிர்வாகி  கிருஷ்ணன் ஆகிய மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில், காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை.வைகோவிடம் பட்டியல் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: