திருவனந்தபுரம்: முதல்வர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்ததாக கூறி பினராய் விஜயனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் லோக் ஆயுக்தாவில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து விசாரணை 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கேரளாவில் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து அரசியல் தலைவர்களின் குடும்பத்தினருக்கு விதிமுறைகளை மீறி நிதி உதவி வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முதல்வர் பினராய் விஜயன் மற்றும் கடந்த அமைச்சரவையில் இருந்த 18 அமைச்சர்கள் மீது லோக் ஆயுக்தாவில் புகார் செய்யப்பட்டது. கடந்த வருடம் பிப்ரவரி 5ம் தேதி இந்த வழக்கில் விசாரணை தொடங்கி மார்ச் மாதம் நிறைவடைந்தது.