பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில மாதமாக மழையில்லாமல் வெயிலின் தாக்கமே அதிகமாகியுள்ளது. சில மாதமாக மழையின்றிபோனதால், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஆழயார் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. மொத்தமுள்ள 120அடியான ஆழியார் அணையின் நீர்மட்டம் 58அடியாக சரிந்துள்ளது. இதனால், அணையில் தண்ணீர் குட்டைபோல் காட்சியளிக்கிறது. பெரும்பகுதி மணல் திட்டுகளாகவும், சேறும் சகதியாகவும் உள்ளது. அணையின் நீர்மட்டம் பெருமளவு குறைந்துள்ள நிலையில், தற்போது முதலை நடமாட்டம் தெரிவதாக கூறப்படுகிறது.