சென்னை; ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களை அனுமதிக்க மறுத்ததற்கு இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக தீண்டாமையை உடைத்தெறிந்தது திரையரங்கம். ஆனால் இன்று உழைக்கும் எளிய மக்களை உள்ளே அனுமதிக்காமல் தீண்டாமையை கடைபிடித்தது ஆபத்தான போக்கு என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருக்கிறார்.