திருப்பூர்: திருப்பூர் அருகே உள்ள மங்கலம் பகுதியில் செயல்பட்டு வந்த போலி கிளினிக் மற்றும் மருந்தகங்களில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் கனகராணி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிளினிக்கில் இருந்த விழுப்புரத்தை சேர்ந்த டாக்டர் பிரியங்கா (30) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அவர் தேவையான அனுமதி பெறாமல் கிளினிக் நடத்தியது தெரியவந்தது. அவர் உக்ரைனில் மருத்துவம் படித்ததும், இந்தியாவில் முறையான பயிற்சி பெறவில்லை என்பதும், தகுதி படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கிளினிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதையடுத்து பிரியங்காவையும் கைது செய்தனர்.