சாலையில் கிடந்த செல்போனை போலீசில் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு பாராட்டு

பெரும்பாக்கம்: பெரும்பாக்கம், எழில் நகரை சேர்ந்தவர்  சந்திரசேகர் இவரது மனைவி சத்யா. இவர்கள், நேற்று முன்தினம் பைக்கில் சென்றபோது, மொபைலை தவறவிட்டனர். இது குறித்து, பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்  கொடுத்தனர். அதே பகுதியில், தூய்மை பணியாளர் மகாலட்சுமி சாலையில் கிடந்த செல்போனை  பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரை போலீசார் பாராட்டினர். பின்னர் மொபைலை சத்தியாவிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: