ஜோலார்பேட்டை: திருப்பத்தூரில் மக்கள் குறைதீர்வு கூட்டத்திற்கு தாமதமாக வந்த அதிகாரிகளை கலெக்டர் உள்ளே வர அனுமதி மறுத்து 30 நிமிடம் வெளியே நிற்க வைத்தார். திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டங்களில் அதிகாரிகள் அனைவரும் காலை 9 மணிக்கு முன்னதாகவே வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கரபாண்டியன் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று காலை மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.