நாகர்கோவில்: நாகர்கோவிலில் மகளின் திருமணத்துக்கு முதல்நாள் மின்சாரம் தாக்கி இறந்த பெண்ணின் உடல் இரவோடு, இரவாக தகனம் செய்யப்பட்டது. திருமணமும் திட்டமிட்டபடி மறுநாள் சோகத்துடன் நடந்து முடிந்தது.
நாகர்கோவில் கீழ பெருவிளையை சேர்ந்தவர் சண்முகவேல். ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர். இவரது மனைவி சாந்தி (51). இவர்களுக்கு 3 மகள்கள். மூத்த மகளுக்கும், எள்ளுவிளையை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று (27ம்தேதி) திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் மதியம் உணவு தயாரிக்க சாந்தி கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. ஊர் பிரமுகர்கள், உறவினர்கள் கூடி நிச்சயிக்கப்பட்ட திருமணம் நிற்க வேண்டாம், திட்டமிட்டப்படி திருமணத்தை நடத்துவோம் என கூறினர்.