சிறை காவலரை சுட்டு கொன்று தீவிரவாதிகள் தப்பியோட்டம்

இடாநகர்: அருணாச்சல பிரதேசம் டிராப் மாவட்டம்,கோன்சா சிறையில் என்எஸ்சிஎன் (கே)  தீவிரவாத குழுவை சேர்ந்த   ரோக்சென் ஹோம்ச்சா லோவாங் மற்றும் டிப்டு கித்தனியா  ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம்  இந்த  தீவிரவாதிகள் இரண்டு பேரும் சேர்ந்து சிறை காவலரின் துப்பாக்கியை பறித்து அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.  பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் படுகாயமடைந்த சிறை காவலர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். தப்பி ஓடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: