உத்திரமேரூர்: உத்திரமேரூரில் நடந்த, நுகர்வோர் பாதுகாப்பு சங்க பொதுக்குழு கூட்டத்தில், பழைய மின் கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய மின் கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், நுகர்வோர் பாதுகாப்பு சங்க கோரிக்கையினை ஏற்று, 10 ஆண்டுகளாக மூடிக்கிடந்த ரேஷன் கடையினை திறந்தமைக்கு மாவட்ட நிவாகத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.