திருவில்லிபுத்தூர்: தமிழ்நாடு வனத்துறைக்காக முதன்முதலாக வாங்கப்பட்ட மோப்பநாய் சிமி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. தமிழ்நாடு வனத்துறைக்காக ‘சிமி’ என்ற பெண் மோப்பநாய் முதன்முதலாக வாங்கப்பட்டு விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வனத்துறையில் சேர்க்கப்பட்டது. மத்திய பிரதேசம் போபாலில் 2014ம் ஆண்டு பிறந்த சிமி ஒரு வருட பயிற்சிக்கு பின்னர் வனத்துறையில் பணியாற்றி வந்தது. தேனி மாவட்டம் சுருளி பகுதியில் உள்ள காப்பு காட்டு பகுதியில் யானை ஒன்று இறந்த வழக்கில் முக்கிய பணியாற்றியது. அதேபோல் சாப்டூர் பகுதியில் சிறுத்தை இறந்தது தொடர்பாகவும் முக்கியமாக பணியாற்றியது.