அவனியாபுரம்: இலங்கை அரசு கையகப்படுத்திய தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மதுரையில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டி: சவுராஷ்ட்ரா தமிழ்ச்சங்கம் சார்பில் மதுரைக்கும் சோம்நாத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரு வாரம் தமிழ் விழா நடைபெற உள்ளது. பிரதமர் மோடியின் தொகுதியான காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள உறவுகள் குறித்தும், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் காஞ்சிபுரம் பட்டுச்சேலை, பனாரஸ் பட்டுச்சேலைக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.