நாகர்கோவில்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி: 2014ம் ஆண்டு பாஜ ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஜனநாயகம் செத்துவிட்டது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட உரிமை உண்டு. அந்த உரிமையை பாஜ அரசு பறித்து இருக்கிறது. சர்வாதிகாரியாக, பாசிச கொள்கையை பிடித்துக் கொண்டு பிரதமர் மோடி செயல்படுகிறார். ராகுல் காந்திக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை ஒரு தனிப்பட்ட நபருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையாக பார்க்க கூடாது.