திருத்துறைப்பூண்டி: தமிழ்நாடு அரசு சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் (ஓய்வு) மூத்த மனநல டாக்டர் செல்வராஜன் திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தை பார்வையிட்டார் பராமரிக்கப்படும் அனைத்து பதிவேடுகளையும் கோப்புகளையும் கேட்டறிந்து பார்வையிட்டார். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள ஆண்கள் பெண்கள் அழைத்து பேசி மனநல சிகிச்சை அளிக்கப்படும் விதம் போன்றவற்றை கேட்டறிந்தார் மனநல மருத்துவர் வாரம் ஒரு முறை வருகை புரிய கேட்டுக் கொள்ளுமாறு தெரிவித்தார். உள்நோயாளிகளில் வேறு ஏதேனும் மாற்றங்களோ, வித்தியாசம் தெரிய வந்தால் உடனே மனநல மருத்துவரிடம் தெரியப்படுத்தி விடுமாறு கூறினார். வேறு சாதாரணமான வியாதிகளோ, மாற்றங்களோ தெரிய வந்தால் அரசினர் மருத்துவமனைக்கு உடனே அளித்து செல்லுங்கள் என்று சொன்னார்.