கோவை: கோவை அருகே மின் கம்பம் முறிந்து தலையில் விழுந்ததில் மின்சாரம் தாக்கி யானை பரிதாபமாக உயிரிழந்தது. கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் பூச்சியூர் அடுத்துள்ள ராவுத்துகொல்லனூர். மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் உள்ள இந்த வனப்பகுதியில் குருவம்மாள் கோவில் உள்ளது. இந்த வனப்பகுதியில் சிக்கிள் பேஸ் மின் கம்பங்கள் உள்ளன. நேற்று முன்தினம் உணவு மற்றும் குடிநீர் தேடி அருகில் உள்ள குருடிமலை அடிவார பகுதியில் இருந்து ஒற்றை ஆண் காட்டு யானை வந்தது. அப்போது, இந்த பகுதியில் மழை பெய்த ஈரம் அதிமாக இருந்தது. அப்போது, மின் கம்பத்தில் யானை உரசியது.