குன்னூர்: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டுக்குட்பட்ட பகுதியில் அண்ணா நகர் உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த பகுதிக்கு செல்லும் பாதையானது கொடநாடு எஸ்டேட் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், பொதுமக்கள் சென்று வர கடும் கட்டுப்பாடுகள் இன்று வரை இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக எஸ்டேட் தரப்புக்கும், பொதுமக்களுக்கும் இடையில் வழி சம்பந்தமான பிரச்னை இருந்து வருகிறது. இதுதொடர்பாக, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 20.9.2007ம் ஆண்டு நடந்த விசாரணையில் கொடநாடு எஸ்டேட் தரப்பில் இளங்கோவன் வழக்கறிஞராக ஆஜராகி வாதாடினார்.