பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே ஆதிவராகபுரம் கிராமம் உள்ளது. இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களுக்கு மின்சார வாரியத்தின் மூலமாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சோலிங்க சாலையில் இருந்து ஆதிவராகுபுரம் செல்லும் சாலையில் வீடுகளுக்கு அருகில் பலவீனமடைந்த மின்கம்பம் உள்ளது. இந்த, மின்கம்பம் அடிப்பகுதியில் சிமெண்ட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் துருப்பிடித்து காட்சி அளிக்கிறது. இது எப்போது உடைந்து அவ்வழியாக செல்லும்போது யார் மீதாவது விழும் அபாயம் இருப்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக சென்று வர அச்சமடைந்துள்ளனர்.