திருவள்ளூர்: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆவடி.சா.மு.நாசர், மாநில ஆதிதிராவிட நல அணி செயலாளர் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் ஆலோசனையின் பேரில் அகரமேல் ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கே.சங்கர் தலைமை தாங்கினார். துணை தலைவர் புவனேஸ்வரி ஞானம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பூந்தமல்லி ஒன்றிய குழு பெருந்தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.