கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே அறுவடை தொடங்கிய 2 மணி நேரத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் நெல் மணிகள் சேதமடைந்தன. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராப்பாளையம் அடுத்த வெங்கட்டாம்பேட்டை, தோப்பூர்,சேம்பங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் ஏறி பாசன விவசாயிகள் 300 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டுள்ளனர். நேற்று நெல் அறுவடையை தொடங்கிய 2 மணி நேரத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது.