கும்பகோணம்: பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. இதை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் சாலை, ரயில் மறியல், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இன்று பகல் 12.05 மணிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.