ஒன்றிய அமைச்சர் அனுராக்தாக்கூர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: 2021ம் ஆண்டு டிசம்பர் முதல் இப்போது வரை 110 யூடியூப் சேனல்களை முடக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தேச ஒற்றுமைக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட இணைபக்கம், சமூக வலைத்தளங்கள் அடங்கிய 248 யூஆா்எல்கள் தடை விதிக்கப்பட்டள்ளன. பத்திரிகையாளர்கள் குறித்து தேசிய குற்ற ஆவணத்தில் எந்தவித தகவலும் இல்லை. அதற்காக தனியாக எந்த தகவலும் சேகரிக்கப்படவில்லை. மேலும் போலி செய்திகள் தொடர்பாக 1160 செய்திகள் முடக்கப்பட்டுள்ளன. இதை வெளியிட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.