உத்திரமேரூர்: உத்திரமேரூர் பஜார் வீதியில் சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், இருசக்கர வாகன பிரசாரம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். இப்பிரசாரத்தினை மாவட்ட செயலாளர் நேரு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம், ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்கிட வேண்டும். வேளாண் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை உற்பத்தி செலவுக்கு மேல் 50 சதவீதம் உயர்த்த வேண்டும். ஒன்றிய அரசு சிறு, குறு மற்றும் மத்திய தர விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பெற்றுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.