வயநாடு: போலீஸ், வழக்குகள் மூலம் என்னை மிரட்ட முடியாது என்று ராகுல்காந்தி தெரிவித்தார். இந்திய ஒற்றுமை யாத்திரையில் ‘பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்’ என்று பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம், அதுகுறித்து விசாரிக்க டெல்லி போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். இதுபற்றி கேரள மாநிலம் வயநாட்டில் அவரது எம்பி தொகுதிக்கு உட்பட்ட பல குடும்பங்களுக்கு புதியதாக கட்டிய வீட்டின் சாவியை வழங்கும் விழாவில் ராகுல்காந்தி பேசியதாவது:
பிரதமர், பா.ஜ, ஆர்எஸ்எஸ், காவல்துறையை கண்டு பலர் பயப்படலாம். ஆனால் நான் இல்லை.