திருத்தணி : திருத்தணி அடுத்த திருவாலங்காடு கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வேணுகோபாலபுரம் ஊராட்சிக்குட்பட்ட பரேசபுரம், ராமலிங்கபுரம், கூர்ம விலாசபுரம், காவேரி ராசபுரம் ஊராட்சிக்குட்பட்ட பங்காரன் பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திருவலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் புடவை, மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி என ஆயிரம் பேருக்கு நல திட்டங்களும் மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ் மகாலிங்கம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் சுஜாதா மகாலிங்கம் களம்பாக்கம் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.