ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பொது இடங்களில் நில மோசடியில் ஈடுபட்ட பூதாகரன் பகுதியை சேர்ந்த இனியவன்(33), பெரியபாளையம் ஆரணி பகுதியை சேர்ந்த அறிவுநிதி(29) இருவரும் ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் நில அபகரிப்பு வழக்கிலும், திருவள்ளூர் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த விஷ்வா என்கின்ற இஸ்கேல்(22) பூந்தமல்லி போலீசாரால் வழிப்பறி வழக்கிலும், வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன்(29) வழிப்பறி வழக்கிலும் நசரத்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.