திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடிபோதையில் கண்ணாடியை உடைத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் அடுத்த திருநின்றவூர் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜி(28). இவருடைய தாயார் பெயர் பவானி(48). கடந்த 15ம் தேதி உடல் நலக்கோளாறு காரணமாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு, பவானி சிகிச்சை பெற்று வருகிறார்.