இளையான்குடி: பெட்ரோல் குண்டு வீச்சில் உயிரிழந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்தினருக்கு முதல்வரால் அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிவாரணத்தொகையை, நேற்று அவரது மனைவியிடம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே இண்டன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன். இவர் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 3ம் தேதி இரவு, டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் படுகாயமடைந்த அர்ச்சுனன், சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.