ஓசூர் : ஓசூர் அருகே காட்டுத்தீயால் மாந்தோப்பு எரிந்து நாசமான சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஓசூர் அருகே கெலமங்கலம் சாலையில் அச்செட்டிப்பள்ளி பகுதியில், பெங்களூருவைச் சேர்ந்த யசோதாவேணி என்பவருக்கு சொந்தமான 12 ஏக்கர் மாந்தோப்பு உள்ளது. அதனை சூளகிரியைச் சேர்ந்த விவசாயி தேவராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்திருந்தார். தொடர் மழையால் மாமரங்களில் நன்கு பூ பிடித்து காய்ப்புக்கு வந்திருந்து. இந்நிலையில், கடும் வெயில் வாட்டியெடுத்து வருவதால் அப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருகிறது. நேற்று முன்தினம் தேவராஜ் குத்தகைக்கு எடுத்துள்ள மாந்தோப்பிலும் காட்டுத்தீ பரவியது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.