சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரை பணிநீக்கம் செய்ய ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர்: பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கத் துடிக்கிறார். பழிவாங்கப்படும் மாணவிகள் செய்த ஒரே தவறு, உதவிப் பேராசிரியர் பிரேம்குமார் மீது பல்கலைக்கழக நிர்வாகம் சுமத்திய பாலியல் புகார் பொய். இது பழிவாங்கும் செயல் என்று ஆட்சியரிடமும், ஊடகங்களிடமும் அம்பலப்படுத்தியதும், நீதிகேட்டு போராடியதும் தான். பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது நூற்றுக்கணக்கான குற்றச்சாட்டுகள் உள்ளன.  அரசே அவரது நிர்வாகத்துக்கு எதிராக விசாரணை நடத்த ஆணையிட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும் துணைவேந்தரின் பழிவாங்கும் செயல்கள், தடையின்றி தொடருவதை அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது. மாணவிகளின் நன்நடத்தை சான்றிதழை திரும்பப் பெற்று, புதிய சான்றிதழ்கள் வழங்க வேண்டும். பல்கலையை சீரழிக்கும் துணைவேந்தர் மற்றும் அவரது குழுவினரை பணி நீக்கம் செய்து, அவர்கள் மீதான புகார்கள் குறித்து ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்.

Related Stories: