திருக்கழுக்குன்றம்: மனைவி குடும்பம் நடத்த வராததால் மனமுடைந்த கணவன், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலத்தை சேர்ந்தவர் செல்வம் (30). இவருக்கும் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த வாணி (24) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். செல்வம், அடிக்கடி குடித்துவிட்டு மனைவி வாணியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த வாணி, கடந்த பல மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் புதுப்பட்டினத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அன்று முதல் மிகுந்த மனக்கவலையில் இருந்தார் செல்வம். இந்நிலையில், வாணியை, குடும்பம் நடத்த வரும்படி பலமுறை அழைத்துள்ளார். அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த செல்வம் குடிபோதையில் நேற்று அதிகாலை வாணி வசிக்கின்ற புதுப்பட்டினம் பகுதிக்கு சென்றார்.