திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்கப்பட்டது. சுமார் ரூ.75 லட்சத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர் பயன்படுத்திய கார் மற்றும் அதிலிருந்து இறங்கி செல்லும் நபர் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இதனையடுத்து 9 தனிப்படைகள் அமைத்து பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் அரியானா உள்ளிட்ட பல பகுதிகளில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.