தேன்கனிக்கோட்டை: அஞ்செட்டி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, மறுபக்கம் செல்வதற்காக சாலையில் நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உள்ள யானைகள், கோடை தொடங்கி உள்ளதால் உணவு, தண்ணீர் தேடி அவ்வப்போது சாலையை கடந்து, மறுபக்கம் உள்ள காட்டிற்குள் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஒற்றை யானை ஒன்று, அஞ்செட்டி - தேன்கனிக்கோட்டை சாலையோரம் காட்டுப் பகுதியில் நின்றிருந்தது.