கம்பம்மெட்டு அருகே சாலையோரம் இறந்து கிடந்த சிறுத்தை பூனை

கூடலூர்: தமிழக எல்லை கம்பம்மெட்டு அருகே உள்ள கேரளப்பகுதியான மூணாறு-தேக்கடி மாநில நெடுஞ்சாலையில் உள்ள புளியன் மலை அருகே சாலையோரம் லெப்பேட் கேட் எனப்படும் சிறுத்தை பூனை ஒன்று இறந்து கிடந்தது. அந்த சிறுத்தைப்பூனையைக் கண்ட அப்பகுதி மக்கள் இறந்தது சிறுத்தை என வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், இறந்த சிறுத்தைப்பூனை உடலை மீட்டு தேக்கடி வனவிலங்கு ஆராய்ச்சிநிலைய மருத்துவ மனைக்கு உடற்கூறு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்:

இறந்தது மூன்று வயது மதிக்கத்தக்க சிறுத்தை பூனை என்றும், அது வாகனம் மோதியோ அல்லது வேறு காரணங்களாலோ இறந்திருக்கக்கூடும், பிரேத பரிசோதனைக்கு பின் சிறுத்தைப்பூனை உடல் வனப்பகுதியில் புதைக்ககப்படும் என்றனர்.

Related Stories: