சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதி மல்கொத்திபுரம் தொட்டி கிராமத்தில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் விவசாய தோட்டங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, காவல் நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாக உள்ளது. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்கொத்திபுரம் தொட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை கடந்த ஓராண்டாக பல்வேறு கால்நடைகளை வேட்டையாடி கொன்று குவித்ததால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளதோடு விவசாய தோட்டத்தில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வளத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.