ஐதராபாத்: இன்ஸ்டகிராமில் புதிய சாதனை படைத்திருக்கிறார் அல்லு அர்ஜுன். புஷ்பா படம் மூலம் பான் இந்தியன் ஸ்டாராக மாறிப்போனார் அல்லு அர்ஜுன். அவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்து வருகிறது. புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் செய்த மேனரிசங்கள், உலகம் முழுவதும் பிரபலமானது. இந்நிலையில், இப்போது புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார். மேலும் இன்ஸ்டகிராமில் 20 மில்லியன் பாலோயர்களை பெற்று, இத்தனை பின்தொடர்பவர்களை பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.