பழங்குடியின பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் சமபங்கு பெற ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பழங்குடியின பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் சமபங்கு பெரும் உரிமை வழங்கும் அறிவிப்பு வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட தேவையான நடவடிக்கை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என நீதிபதி ஆணையிட்டுள்ளார்.

ராமசாமி என்பவரின் குடும்ப சொத்தில் மனைவி, மகளுக்கு சமபங்கு தரவேண்டும் என்ற சேலம் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராமசாமியின் மகன்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்து வாரிசுரிமை சட்டத்தில் பழங்குடியின பெண்கள் சேர்க்கப்படவில்லை, சொத்து பங்கு தர வேண்டும் என சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறு என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 70 ஆண்டு கடந்தும் பழங்குடியின பெண்களுக்கு சொத்துரிமை மறுப்பது வருந்தத்தக்கது பழங்குடியின பெண்களுக்கும் சொத்துரிமை கிடைக்கும் வகையில் ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: