சென்னை: பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையற்றினார். எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வில் முதல்வர் முக ஸ்டாலின் சிறப்புரையற்றினார். அவர் கூறியதாவது , உலகத்தில் எந்நாளும் போற்றப்படக்கூடியவர்கள் பெண்கள்.பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட இயக்கம் திராவிட இயக்கம். மகளிர் தினம் மனிதகுலத்துக்கும் மனித உரிமைகளுக்கும் முக்கியமான நாள்.