சென்னை: சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது பிரிவில் திருவள்ளூருக்கு முதல் பரிசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்று வருகிறது. ம.இளம்பிறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண் குழந்தை விருது வழங்கினார். மகளிருக்காக சிறப்பாக செயல்பட்ட 3 மாவட்ட ஆட்சியர்களுக்கும் விருது வழங்கப்பட்டது. சென்னையில் சமூக நலத்துறை சார்பில் நடந்து வரும் சர்வதேச மகளிர் தின விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறார்.
