தேனி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார்(95), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 24ம் தேதி இரவு 10 மணியளவில் பெரியகுளத்தில் உள்ள இல்லத்தில் காலமானார். ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவிற்கு துக்கம் விசாரிப்பதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்றார்.