திருவாரூர்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் திருவாரூரில் அளித்த பேட்டி: தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கு மசோதா நிறைவேற்றப்பட்டு அந்த மசோதா, ஆளுநர் மாளிகையில் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தொடர்ந்து பலி ஏற்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.