ஊத்துக்கோட்டையில் இலவச கண் சிகிச்சை முகாம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பேரூர் திமுக சார்பிலும் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர். பேரூர் செயலாளர் அபிராமி குமரவேல் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத், துணைத்தலைவர் குமரவேல், அவைத்தலைவர் வெங்கடேசன், பொருளாளர் கே.சி.ஜெயராமன், துணைச்செயலாளர்கள் திரிபுரசுந்தரி, பார்த்திபன், தமிழ்செல்வன், அப்துல்பரீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் டாக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் 25க்கும் மேற்பட்ட மருத்துவக்குழுவினர் 750 பேருக்கு கண் சிகிச்சை செய்தனர். இதில் 89 பேருக்கு கண்ணாடி வழங்க பரிந்துரைக்கப்பட்டது. 27 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ. மூர்த்தி பங்கேற்று 70 பெண்களுக்கு புடவைகளையும் 750 பேருக்கு பிரியாணியும் வழங்கினார். முன்னதாக ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 6 முதல் 10 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 270 பேருக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோகுல்கிருஷ்ணன், கோல்டுமணி, இந்துமதி, ஜீவா, கல்பனா, ஒன்றிய பிரதிநிதி மோகன்பாபு, வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: