நாக்பூர்: சமூக வலைதள நண்பர் மூலம் கர்ப்பமான 15 வயது சிறுமி, யூடியூப் சேனலை பார்த்து குழந்தை பெற்றார். பின்னர் அந்த குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் நாக்பூரில் நடந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அடுத்த அம்பாசாரியில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 15 வயது சிறுமி, யூடியூப் வீடியோக்களைப் பார்த்து தனது வீட்டில் பெண் குழந்தையைப் பிரசவித்துக் கொண்டார். பின்னர் அந்த குழந்தையைக் கொன்றதாக போலீசார் கூறினர். இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘சமூக ஊடகங்களில் பழகிய ஒருவரால் நாக்பூரை சேர்ந்த 15 சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு தள்ளப்பட்டார். பின்னர் அவர் கர்ப்பமானார். தான் கர்ப்பமான விஷயத்தை தனது தாயிடம் தெரிவிக்கவில்லை. வெளியே சொன்னால் பிரச்னையாகிவிடும் எனக்கருதி, தானாகவே பிரசவம் பார்ப்பது எப்படி? என்பது குறித்து சமூக வலைதளமான யூடியூப் வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கினார்.