சென்னை: பொய்மையின் மொத்த உருவம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். வைத்திலிங்கம் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இன்னமும் கட்சியின் வளர்ச்சிக்காக, கட்சி ஒற்றுமைக்காக ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார் பன்னீர்செல்வம். தான் பொதுச்செயலாளராக ஆக வேண்டும் என்ற ஒரே தன்னல நோக்கோடு ஓபிஎஸ் மீது எடப்பாடி பொய்யான குற்றம்சாட்டுகளை சுமத்துகிறார். ஓபிஎஸ் மீது பொய்யான, அவதூறான, விஷமத்தனமான குற்றச்சாட்டுகளை மனசாட்சியுள்ள யாரும் ஏற்க மாட்டார்கள்.