சென்னை: திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் பரிந்துரைபடி 2 பேருக்கு பிரதமர் அலுவலகம் நிவாரண நிதி ஒதுக்கி உள்ளது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம், டி.ஆர்.பாலு எம்.பிக்கு தெரிவித்துள்ள விவரத்தில், ‘பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தனலட்சுமி வாசுதேவனின் புற்றுநோய் சிகிச்சைக்கான ரூ.3 லட்சமும் சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் மையத்திற்கும், புகழேந்தியின் இதயநோய் சிகிச்சைக்கான தொகை ரூ.50,000, போரூர் ஸ்ரீராமசந்திரா மருத்துவமனைக்கும் வழங்கப்படும்.